உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

பண்ருட்டி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நாளை துவக்கம்

பண்ருட்டி: 

                       பண்ருட்டி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நாளை 25ம் தேதி துவங்குகிறது. பண்ருட்டி நகரில் கடலூர் சாலை, ராஜாஜி சாலை, இந்திராகாந்தி சாலை, காந்திரோடு, காய் கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் செல்லமுடியாமல் கடும் பாதிப்படைந்து வந்தனர். பஸ்நிலையத்தில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் உட்காரக்கூட இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் மற்றும் நகராட்சி உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பண்ருட்டி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நாளை 25ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று நகரின் முக்கிய வீதிகளில் "டாம் டாம் ' மூலம் நகராட்சி ஊழியர்கள் அறிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior