உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

போலீஸ் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு: தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

விருத்தாசலம்: 

                   கொல்லத்தங்குறிச்சி கிராமத்தில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என ஊர் பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லத்தங்குறிச்சி கிராமத்தில் நியாயவிலை கடை அருகில் புறம் போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் ஊர் பொதுமக்களின் கோரிக்கை படி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சிமெண்ட் களம் அமைக்க தொடக்க பணி நடந்து வருகிறது. இந்த இடத்தில் காவல் நிலையம் அமைக்க வருவாய்த் துறை மற்றும் அரசு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே இந்த இடத்தில் காவல் நிலையம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என கிராம மக்கள் ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior