உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு போராட்டம்: கடலூரில் 20 பேர் கைது

கடலூர்: 

                      ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர். ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்தும், சத்துணவு, டாஸ்மாக், அங்கன்வாடி துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதில் மாவட்ட கலெக்டரின் நேரடி நியமனம் ஆளும் கட்சிக்கு சாதகமாகவும், ஊழலுக்கு வழி வகுக்கும். எனவே வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கும் பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

                    இதன்படி நேற்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட குழு சார்பில் கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பூட்டுப் போடும் போராட் டத்தில் ஈடுபட முயன்ற மணிவண்ணன், உலகநாதன், குமார், மணவாளன் உள் ளிட்ட 20 பேரை கடலூர் புதுநகர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior