உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

லாட்ஜில் 'ரூம்' போட்டு சூதாட்டம்:வருவாய் ஆய்வாளர் உட்பட 8 பேர் கைது

கடலூர்:

           விருத்தாசலம் லாட்ஜில் "ரூம்' போட்டு சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் இரவு ஓட்டல், லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு சப் இன்ஸ் பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முல்லை நகர் அன்பு லாட் ஜில் அறை எண்.17ல் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டு சுற்றி வளைத்து பிடித்தனர்.

              விசாரணையில், விருத் தாசலம் திரு.வி.க., நகர் ஆசிரியர் தேவராஜன் (48), கடலூர் நகராட்சி வருவாய் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் (47), பூதாமூர் முருகன் (45), பழமலை (42), எம்.பரூர் கொளஞ்சி (43), அரியலூர் உடையார் பாளையம் செல்வகுமார் (35), கார்கூடல் முன்னாள் தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் குறிஞ்சி செல்வன் (40), சிறுபாக்கம் வெள்ளமுத்து(40) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் மற்றும் புள்ளி தாள்களை கைப்பற்றினர்.பிடிபட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் லாட்ஜ் ஓனர் முகமது அனிபா, மேனேஜர் ஜாகீர் உசேன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior