உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

புதுச்சேரி பதிவெண் பஸ்கள் விதிகளை மீறுவதாக புகார்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்திற்குள் வரும் புதுச்சேரி பதிவெண் உள்ள பஸ்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. கடலூரிலிருந்து 24 கி.மீ., தொலைவில் உள்ளது புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் தமிழகம், புதுச்சேரிக்கும் விற்பனை வரி வித்தியாசத்தால் நுகர்வோர்கள் தினமும் புதுச்சேரிக்கு சென்று பொருட்கள் வாங்குவது வழக்கம். கடலூர்-புதுச்சேரியில் ரயில் போக்குவரத்து இல்லாததால் புதுச் சேரி செல்லும் பஸ்சில் கூட்டம் அலைமோதும். கடலூரில் இருந்து 'பீக் அவரில்' 3 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் புதுச்சேரிக்கு செல்கின் றன. இவை சீட்டு ஏற்றுவதற்காக ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் நின்று நேரத்தை வீணடித்துவிட்டு பின்னர் மீதியுள்ள சொற்ப நேரத்தில் அதிவேகமாக பஸ்சை ஓட்டுகின்றனர்.

            குறிப்பாக புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட பஸ்கள் சாலையின் மையத்திலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவது, தடை செய்யப் பட்ட இடத்தில் செவிப்பறையை கிழிக்கும் ஹாரன் சத்தம், திடீரென ஒரு வழிப்பாதையில் நுழைவது என போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விதிமுறை மீறும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior