உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

ராமநத்தம்:

         ராமநத்தம் ஆற்காடு லூத்ரன் சபை வாலிபர் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ராபின்டிரஸ்டின்ராஜ் தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார கல்வி விழிப்புணர்வு பேரவை அமைப்பாளர் வீரமணி முன்னிலை வகித்தார். செல்வராஜ் வரவேற்றார். எய்ட்ஸ் வரும் காரணம், நோயின் கொடூரம், தடுப்பு முறைகள், ஆணுறையின் அவசியம், குடும்ப உறவு குறித்து டாக்டர் கிரிஜா பேசினார்.பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவன தலைவர் கிறிஸ்டோபர், ஸ்டீபன் பிரபாகரன், டீக்கன், டேனி ஆகியோர் எய்ட்ஸ் நோய் குறித்து பேசினர். ராஜாமணி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior