உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

தென்னாற்காடு மாவட்டஆசிரியர் இல்ல மீட்பு கூட்டம்

கடலூர்:

               ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட ஆசிரியர் இல்ல இடம் மீட்பு மற்றும் ஆசிரியர் இல்லம் அமைப்பு நடவடிக் கைக்குழு கூட்டம் கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் சஞ்சிவிராயன் தலைமை தாங்கினார். விஜயரங்கன் வரவேற்றார். குப்புசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடலூரில் ஆசிரியர் இல்லம் கட்ட ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்பில் வாங்கிய 1.20 சென்ட் இடத்தை கிரயப்பத்திரத்தில் உள்ளபடி பதவி வழி சி.இ.ஓ., விடம் பத்திரத்தையும், கடலூர் கனரா வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான வங்கி தஸ்தாவேஜிகளையும் உடனே மீட்டு ஆசிரியர் இல்லம் கட்ட நடவடிக்கை எடுக்க சி.இ.ஓ., வை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior