உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

பாசன வாய்க்கால் ஆக்ரமிப்பு: உண்ணாவிரதம் இருக்க முடிவு

சேத்தியாத்தோப்பு:

                  வட்டத்தூர் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் பகுதியில் உள்ள தனிநபர் ஆக்ரமிப்புகளை அகற்றக்கோரி 17ம் தேதி உண்ணாவிரதம் மேற் கொள்ள கிராம பொதுமக் கள் முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து வட்டத்தூர் கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

                காட்டுமன்னார்கோவில் தாலுகா வட்டத்தூரில் வீராணம் ஏரியின் மேற்கு கரையில் உள்ள பாசன வாய்க்கால் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை சில தனிநபர்கள் ஆக்ரமித்துள்ளனர். இதனால் அப்பகுதி நிலங்கள் பாசனம் பெற முடியாத நிலை உள்ளது.
               மேலும், வடிகால் வசதி இல்லாததால் மழைக் காலங்களில் நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நாசமாகின்றன. இந்த ஆக்ரமிப்புகளை அகற்ற கோரி பல முயற்சிகள் மேற்கொண்டும் பயனில்லை. எனவே தனிநபர் ஆக்ரமிப்பை அகற்ற கோரி வரும் 17ம் தேதி காட்டுமன்னார்கோயில் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior