உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

குறிக்கோளை அடைய அயராது உழைக்க வேண்டும்:நீதிபதிராமபத்திரன்அறிவுரை

கடலூர்:

                   வள்ளலாரின் பசித்திரு, தனித்திரு, விழித்திரு தத்துவத்தை கடைபிடித்தால் "பதவி' தேடி வரும் என நீதிபதி ராமபத்திரன் கூறினார். க டலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் தின விழா நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரட்சகர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஆக்னல் வரவேற்றார்.

நிகழ்ச்சியில மாவட்ட அமர்வு நீதிபதி ராமபத்திரன் பேசியதாவது:

                  மாணவர்கள் குறிக் கோளை அடைய தீவிர முயற்சி செய்தால்தான் வெற்றி கிடைக்கும். ஆசை படுவதை அடைய அல் லும், பகலும் அயராது உழைக்க வேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பேச்சை கேட்டு அதன்படி மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும். வள் ளலாரின் (ப)சித்திரு, (த)னித்திரு, (வி)ழித்திரு என்ற தத்துவத்தை கடைபிடித்து வந்தால் "பதவி' தேடி வரும். மாணவர்களுக்கு படிப்பு மட்டும் போதாது.
                    வாழ்வியல் கல்வியும் அவசியம். குழந் தைகள் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே என்ற பாடலுக்கு ஏற்ப பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல சூழலை உருவாக்கி கொடுத்தால் அவர் கள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக வருவார்கள் என் பதில் சந்தேகமில்லை. இவ்வாறு நீதிபதி ராமபத்திரன் பேசினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட என்.எஸ்.எஸ்., தொடர்பு அதிகாரி திருமுகம், ஜோசப் ஞானராஜ் மற்றும் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.பாலர் பள்ளி முதல்வர் சூசைராஜ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior