உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

ஆறுமுகம் கல்லூரியில்இலவச ரத்ததான முகாம்

ராமநத்தம்: 

         தொழுதூர் ஆறுமுகம் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, திட்டக்குடி அரிமா சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் கிருஷ் ணசுவாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன் முன் னிலை வகித்தார். முதல்வர் ரெங்கநாதன் வரவேற்றார்.இதில் நிர்வாக இயக்குனர் ராஜன் ரத்ததானம் வழங்கி துவக்கி வைத்தார். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 143 யூனிட் ரத்ததானம் செய்தனர். முகாமில் கல்லூரி முதல்வர் துரைஎழிலன், அரிமா மாவட்ட தலைவர்கள் இன்பசேகரன், சேகர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior