உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

பாமாயில் மரம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்: நெல் உற்பத்தி கணிசமாக குறைய வாய்ப்பு

காட்டுமன்னார்கோவில்:

                நெல்பயிரை மட்டுமே நம்பியிருந்த காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் சமீப காலமாக பாமாயில் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதிகள் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளாக கருதப்படும். இங்குள்ள விவசாயிகள் நெல் சாகுபடியை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.

                குறிப்பாக அப்பகுதியின் உயிர் நாடியாக விளங்கும் வீராணம் ஏரியின் பாசனத்தை நம்பி 70 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக மழை, வெள்ளம், பருவம் தவறிய மழை, கடும் வறட்சி உள்ளிட்ட பிரச்னைகளை சமாளித்து தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியாமல் திணறி வருகின்றனர்.இதனால் பல்லாயிரக்கணக்கில் கடன் பெற்று விவசாயம் செய்தும் பலன் இல்லாமல் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மாற்று பயிராக பாமாயில் மரம் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக பாமாயில் பயிர் செய்யப்பட்டு வந்தாலும் தற்போது விவசாயிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

               காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் கடந்த 2006ம் ஆண்டு மேலகடம்பூரில் அப்துல் வதூது 3 ஏக்கரில் பாமாயில் பயிர் செய்தார். அவரையடுத்து கணேசன் என்பவர் 5 ஏக்கரில் பாமாயில் பயிர் செய் தார். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பாமாயில் பயிர் செய்வது அதிகரித்து வருகிறது.உற்பத்தி செலவு, திருடு பயம், கூலி ஆட்கள், குறைந்த தண்ணீர் தேவை, சுலபமான அறுவடை போன்ற காரணங்களால் பாமாயில் பயிர் செய்வது விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்றதையடுத்து தற் போது 800 ஏக்கர் வரை காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் பாமாயில் பயிர் செய்யப்பட்டுள்ளது.பாமாயில் பயிர் செய்யும் நிலத்தில் ஊடுபயிராக நெல், வாழை, உளுந்து பயிரிட்டு லாபமடையலாம். அதுமட்டுமில்லாமல் விவசாயிகள் இடம் மட்டும் கொடுத் தால் போதும். உரம், கன்றுகள் என அனைத்து உதவிகளையும் அரசு மானியமாக கொடுத்து, பராமரிப்பு செலவையும் அரசே கவனித்துக்கொள் கிறது. தொடர்ந்து பயிர் வளரும் வரை 4 ஆண்டுகள் தொடர்ந்து மானியமாக அரசு வழங்கி வருகிறது.
                இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்து மழை, வெள்ளத்தில் நஷ்டப்படுவதை விட "ரிஸ்க்' இல்லாமல் விவசாயம் செய்வதே சிறந்தது என விவசாயிகள் பாமாயில் மரத்தை பயிர் செய்வதில் அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நெல் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாமாயில் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இந்த பாமாயில் சாகுபடி வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior