உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தகுறவர் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

கடலூர்:

                  பழங்குடி மக்களின் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென தமிழ்நாடு குறவர் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

                    குறவர் இனம் உட்பட தலித்-பழங்குடி மக்களின் அரசியல் விழிப்புணர்வு வாழ்வுரிமை மாவட்ட மாநாடு கடலூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் திருவாதிரை தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி வரவேற்றார். மாநாட்டை மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்து பேசினார். துணை சேர்மன் தாமரைச் செல்வன், மாநில துணைப்பொதுச் செயலாளர் தேவகலையழகன், பெருமாள், நாகை ராமலிங்கம், தேனி முருகேசன், ஈரோடு சண்முகம், திண்டுக்கல் ஸ்ரீராமி, திருச்சி தேவி, மகேந்திரன், விவேகானந்தன், புகழேந்தி பங்கேற்றனர்.
                     கூட்டத்தில் மத்திய அரசால் 2006ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பழங்குடி மக்களின் வன உரிமைச் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். குறவர் பழங்குடி மக்களுக்கு சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். பழங்குடி இன மக்களுக்கு இனச் சான்று வழங்க மறுக் கும் போக்கை கைவிட்டு இனச்சான்று குறித்த இதர சமூகத்திற்கு பின்பற்றும் அதே நிலையை பின்பற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்பாளர் முனுசாமி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior