உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை:பயனாளிகளுக்கு வழங்குவதில் சிக்கல்

பரங்கிப்பேட்டை:

          பரங்கிப்பேட்டையில் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பயனாளிகளுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை பகுதியில் தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு வருவாய்துறை மூலம் பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பு முதல் தடவையாக சுமார் 2500 பயனாளிகளின் அடையாள அட்டை கிராம நிர்வாக அதிகாரியிடம் வந்துள்ளது. அடையாள அட்டைகளை வார்டு வாரியாக பிரித்து கொடுக்காமல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த வார்டு கவுன்சிலர்கள், தெரிந்தவர்கள் என அனைவரும் தேவைக்கு ஏற்ப எடுத்து சென்றுவிட்டனர்.

           இதனால் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டைகள் கிடைக்காமல் உள்ளது. அடையாள அட்டைகளை எடுத்து சென்றவர்கள் விபரம் தெரியாத அட்டைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் தாங்களே வைத்துள்ளனர். இதனால் கஷ்டப் பட்டு புகைப்படம் எடுத்தும் அடையாள அட்டை கிடைக்கவில்லையே என புலம்பி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior