உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

கல்லூரி ஆசிரியர்களுக்கான போட்டி:அண்ணாமலை பல்கலை., சாம்பியன்

சிதம்பரம்:

          சென்னையில் நடந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் அண்ணாமலை பல்கலை., அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி சென்னை ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. இதில் கூடைபந்து, வாலிபால், கால் பந்து, பூப்பந்து, இறகுபந்து ஆகிய போட்டிகள் நடந்தது. 50க்கும் மேற்பட்ட அணிகள் பங் கேற்றன. அண்ணாமலை பல்கலைக்கழக அணி கால்பந்து, கூடைபந்து, இறகுபந்து போட்டிகளில் முதலிடத்தையும், வாலிபால் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்து சாம்பியன் பட் டத்தை வென்றது. அண் ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை இணை பேராசிரியர்கள் ராஜசேகரன், கோபிநாத், செந்தில்வேலன் ஆகியோர் அணிகளுக்கு தலைமை தாங்கினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜோசப் கல்லூரி இயக்குனர் பாபு மனோகர் பரிசு வழங்கினார். சாம்பியன் பட்டம் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணியை உடற்கல்விதுறை இயக்குனர் மங்கையர்கரசி, பேராசிரியர் ரவீந்திரன் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior