உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

கடலூரில் வட்டார வள மையஆசிரியர் பயிற்றுனர் தேர்வு

கடலூர்:

          கடலூரில் 10 மையங்களில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் தேர்வு நேற்று நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 500 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த 5,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4,766 பேர் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் உள் ளிட்ட பாடங்களில் கேள்விகள் கேட்கப் பட்டன. காலை 10 மணிக்கு துவங்கி 1 மணிக்கு முடிந்தது.கடலூர் மாவட்டம் முழுவதிலுமிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் 10 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வையொட்டி சி.இ.ஓ., அமுதவள்ளி தலைமையில் 250 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும், 40 தலைமையாசிரியர்கள் துறை அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior