உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

மாணவர்களுக்கு செய்முறை தேர்வு:விருத்தாசலத்தில் மின் நிறுத்தம் மாற்றம்

விருத்தாசலம்:

             விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களின் செய்முறை தேர்வை யொட்டி மின் நிறுத்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் செயற்பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 

              விருத்தாசலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தற்போது செய் முறை தேர்வுகள் நடந்து வருவதால் மின்நிறுத்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.காலை 8 மணி முதல் 10 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்ட காந்திநகர், கடைவீதி, தென் கோட்டைவீதி, கம்பர் வீதி, சேலம்ரோடு ஆகிய பகுதிகளுக்கும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்ட பெரியார்நகர், பூதாமூர், கடலூர் ரோடு, அண்ணாநகர் ஆகிய பகுதிகளுக்கும் இன்று முதல் ஒரே நேரமாக காலை 7 மணி முதல் 9 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். வரும் 20 ம் தேதி வரை இந்த புதிய நடைமுறையும் பின்னர் பழைய முறையில் மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior