உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

அம்மேரி கொக்கன்குப்பம் பள்ளிக்கு நிலம் தானம்

நெய்வேலி:

                நெய்வேலியை அடுத்துள்ள அம்மேரி கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஊர் மக்கள் தங்கள் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். நெய்வேலியை அடுத்துள்ள அம்மேரி கொக்கன்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு போதுமான இடம் இல்லாத நிலை இருந்து வந்தது. கடந்த 11ம் தேதி பள்ளியில் கல்விக்குழு கூட்டம் நடந்தது.  ஊராட்சி மன்றத் தலைவர் தங்கதுரை தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை இருதயமேரி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜகோபால், ராமச்சந்திரன், ராஜவேல், காசிநாதன், முருகேசன் ஆகியோரின் குடும்ப சொத்தில் 9 சென்ட் நிலத்தை, மேற் பார் வையாளர் ஜம்புலிங்கம், ஆசிரியர் நடராஜன் முன்னிலையில் பள்ளிக்கு தானமாக வழங்கினர். விழாவில் தமிழ்ச்செல்வன், கல்வியாளர் சாமிக்கண்ணு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாண்டியன், பள்ளி ஆசிரியர் செல்வராணி பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior