உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள்நல சங்கம் கடலூரில் துவங்கியது

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. ஓய்வு பெற்ற போலீசாருக்கு மட்டுமின்றி பணியிலிருப்பவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மன்றத்தை அணுகினால் ஆதரவாக குரல் கொடுப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் நேற்று துவங்கியது. மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் காசிநாதன் சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

               சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவராக பாலுசாமி, செயலாளராக வடிவேல், இணை செயலாளராக பாலு, பொருளாளராக மணி, செய்தித் தொடர்பு அதிகாரியாக நூருல்லாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஓய்வு பெற்ற இன்ஸ் பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று 60க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior