உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

நாட்டு நலப்பணி திட்டம் துவக்கம்

நெய்வேலி:

             நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட பிரிவின் 7 நாள் சிறப்பு முகாம் இருப்பு கிராமத்தில் நடந்தது.நெய்வேலி அருகே உள்ள இருப்பு கிராமத்தை உள்ளடக்கிய தெற்கிருப்பு மற்றும் வடக்கிருப்பு கிராமங்களில் ஜவகர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட பிரிவின் 100 மாணவ, மாணவிகளை கொண்டு 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பத்மாமணி தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியர் கிப்ட் கிறிஸ் டோபர் வரவேற்றார்.
                    என்.எல்.சி. மருத்துவமனை பொது கண்காணிப்பாளர் சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். என்.எல்.சி. முதன்மை பொது மேலாளர் பெருமாள்சாமி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் கோவையிலிருந்த முனைவர் கவிதாசன் தொலைபேசி கான்பரன்ஸ் மூலம் நாட்டு நலப்பணி திட்ட முகாமை வாழ்த்தி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் தங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர்கள் ராசாராம், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior