உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் தாமதம்:மாணவர்கள் கல்வித் தரம் பாதிப்பு

நடுவீரப்பட்டு:

               சி.என்.பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவ,மாணவிகளின் கல்வி தரம் பாதிப்படையும் நிலை உள்ளது. பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் கடைவீதி மற்றும் மழவராயநல்லூர் காலனி ஆகிய இரண்டு இடங்களில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த சில மாதங்களுக்கு முன் தான் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவது இல்லை. ஆசிரிய, ஆசிரியைகள் கடலூரிலிருந்து வேன் மூலம் மிகவும் தாமதமாக வருகின்றனர். வகுப்புக்கு செல்ல காலை 11 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.

             தனித்தனியாக பஸ்சில் வரும் போதாவது ஒரு சில ஆசிரியைகளை தவிர மற்றவர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்தனர். ஆனால் வேன் வசதி ஏற்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியைகளும் தாமதமாக வருவதே வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் இல்லாததால் காலை 11 மணி வரையில் மாணவர்கள் அதிகளவு ரோட்டு பகுதியில் சுற்றித்திரிகின்றனர். இதனால் கல்வித்தரம் குறைவதோடு விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆசிரிய, ஆசிரியைகள் தாமதமாக வருவதை தவிர்க்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாணவர்கள் கல்வித்தரம் உயரும் என்பதில் ஐயமில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior