உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

மனைப்பட்டா கிடைக்கும் வரை மறியல்: தமிழக விவசாய சங்க வட்டக்குழு முடிவு

திட்டக்குடி:

            திட்டக்குடி வட்டக்குழு தமிழக விவசாய சங்கம் சார்பில் இறையூர் சர்க்கரை ஆலை முன்பாக கரும்பு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 400 வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக் கப்பட்டது.தமிழக விவசாய சங்க திட்டக்குடி வட்டக்குழு கூட்டம் பெண்ணாடத்தில் நடந்தது. வட்டத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் ராஜேந்திரன் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில் செயலா ளராக கோவிந்தராஜ்,தலைவராக பூமாலை, பொருளாளராக முத்துசாமி தேர்வு செய்யப்பட்டனர்.

                      பின்னர் நடந்த கூட்டத்தில், கரும்பு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 400 வழங்க வேண்டும். வெட்டு கூலியை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ஆயிரத்து 500 ரூபாய் விலை நிர்ணயம் செய்யக் கோரி வரும் 24ம் தேதி இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. குடிமனைப்பட்டா, இரண்டு ஏக்கர் இலவச நிலம், கோவில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா, குத்தகை விவசாயிகளுக்கு பட்டா, ஏரி மற்றும் குளங்களில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கக் கோரி மார்ச் 1ம் தேதி திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் பட்டா கிடைக்கும் வரை மறியல் போராட்டம் நடத்துவது. இதனை விளக்கி வரும் 23ம் தேதி முதல் தாலுகா முழுவதும் பிரசாரம் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior