உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சி தலைவர்மீண்டும் செயல்பட கலெக்டர் உத்தரவு

கடலூர்:

           முறைகேடு புகார் சம்பவத்தை தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி தலைவர் மீண்டும் செயல்பட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பண்ருட்டி ஒன்றியம் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி தலைவர் மாயவேல், நிதி முறைகேடு செய்த புகாரை தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். அதனை ரத்து செய்யக் கோரி மாயவேல் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த ஊரக வளர்ச்சி துறை மற் றும் ஊராட்சி முதன்மை செயலர் அஷாக் வர்தன் ஷெட்டி பிறப்பித்த உத்தரவை ஏற்று, மாயவேலை சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சி தலைவராக தொடர கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior