உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

கீரப்பாளையம் ஒன்றியத்தில் ரூ.26 லட்சம் திருமண உதவி


சேத்தியாத்தோப்பு : 

             கீரப்பாளையம் ஒன்றியத்தில் 26 லட்ச ரூபாய் திருமண உதவி திட்ட நிதியை சேர்மன் செந்தில்குமார் வழங்கினார்.
 
            தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் கீழ் கீரப்பாளையம் ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் தலைமை தாங்கினார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலியமூர்த்தி வரவேற்றார். விழாவில் 132 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் வீதம் 26 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கான  காசோலைகளை ஒன்றிய சேர்மன் செந்தில்குமார் வழங்கினார். விழாவில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலு, தி.மு.க., மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சபா நாயகம், தி.மு.க., பரதூர் அமைப்பாளர் பாலு, ஆயிப்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவராமன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior