உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

மாணவர்களுக்கு கவர்னர் விருது

சிதம்பரம் : 

                  சிதம்பரம் ராமசாமி செட்டியார்  மேல்நிலைப்பள்ளி சாரண மாணவர்கள் 6 பேருக்கு கவர்னர் விருது வழங்கப்பட்டது.
 
                    சிதம்பரம் ராமசாமி செட்டியார்  மேல்நிலைப் பள்ளி சாரண மாணவர்கள் 6 பேருக்கு கவர்னர் விருது வழங்க நெய்வேலியில் செய்முறை, எழுத்து உள்ளிட்ட தேர்வுகள்  நடந் தன. இதில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா விருது வழங்கி சிறப்பித்தார். விருது பெற்ற மாணவர்கள் கவியரசன், மதன்குமார், அன்பரசன், ஹரிகரன், சேதுமாதவன், தர்மேந்திரன் மற்றும்  சாரண ஆசிரியர் வேலாயுதம் ஆகியோரை பள்ளியின் செயலர் சண்முகசுந்தரம், தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior