உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

பிளஸ் 2 தேர்வையொட்டி மின் தடை நேரம் மாற்றம்

கடலூர் : 

            பிளஸ் 2 தேர்வையொட்டி மின்நிறுத்த நேரம் இன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து கடலூர் செயற்பொறியாளர் மூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
              
                          பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்கும்பொருட்டு மின்சுமை குறைப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டு வந்த செம்மங்குப்பம், கேப்பர்மலை  துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் இனி பகல் 2 மணி முதல் 4 மணி வரைக்கும், காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டு வந்த நத்தப்பட்டு துணை மின் நிலைய பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் 8 மணிவரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் தடை நேரம் இன்று முதல் ஏப்ரல் 7ம் தேதிவரை அமலில் இருக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior