உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

லக்கூர் ஊராட்சியில் மருத்துவ முகாம்

ராமநத்தம் : 

                         மங்களூர் ஒன்றியம் லக்கூர் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ திட்டத்தின் கீழ் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் ராணி தலைமை தாங்கினார். தி.மு.க., பிரதிநிதி வெங்கடேசன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியன் வரவேற்றார். மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் மகேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 969 பேரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அவர்களில் 10 பேர் தொடர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். சுகாதார ஆய்வாளர் லோகநாதன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior