உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

''பட்ஜெட்டை கண்டித்து போராட்டம் பணியாளர் சங்கம் பங்கேற்கும்''

கடலூர் : 

                மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கும் என மாநிலத் தலைவர் பாலசுப் ரமணியன்  தெரிவித் துள்ளார்.
 
இது குறித்து அவர் நேற்று கடலூரில் கூறியதாவது: 

            வருமான வரி உச்சவரம்பை மூன்று லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது. ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை உயர்த் தாமல் மீண்டும் 1.60 லட் சம் ரூபாய் உச்சவரம்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமான வரி செலுத்தும் மூன்று கோடி போரில் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது பெட் ரோல், டீசல் விலை உயர்த்தப்பட் டுள்ளதால், அனைத்து பொருட்களின் விலை மேலும் உயரும். இதனால்  மத்திய அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்க செய்துள்ளது. விவசாயத்திற்கு எந்தவித கொள்கை அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட் டுள்ளனர். இதனைக் கண்டித்து வரும் 5ம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள சத்தியாகிரகப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியா ளர் சங்கம் ஆதரவளித்து பங்கேற்கும். அனைத்து மாவட்டத்தில் உள்ள பணியாளர் சங்கத்தினர் மத்திய தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்வர். நேற்று மாநிலத்தில் 28 மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அடுத்த கட்டமாக வரும் 17ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து, அன்று  கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எனவே முதல்வர் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior