உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

சேத்தியாத்தோப்பு : 

              கேர்விமன் தொண்டு நிறுவனம் சார் பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
 
                   சென்னை சி.பி.ராமசாமி ஐயர் பவுன் டேஷன், சென்னிநத்தம் கேர்விமன் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் சந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. முகாமிற்கு தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கணேசன் தலைமை தாங்கினார். தலைவர் கஸ்தூரி முன்னிலை வகித்தார். செயலாளர் வள்ளி வரவேற்றார். ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கிலிதேவன் முகாமை துவக்கி வைத்தார். செயலாளர் வள்ளி வரவேற்றார். ரிசோர்ஸ் பவுன்டேசன் தலைவர் வேளாங்கண்ணி, அரிமா சங்க முன்னாள் தலைவர் சேனாபதி ஆகியோர் புவிவெப்பமடைதல் தடுப்பு குறித்து பேசினர். ஆசிரியர்கள் தியாகராஜன் பாலமுருகன், ஜானகி, எழிலரசி, ஆனந்தன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior