உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

மணிக்கொல்லையில் மின்மாற்றி இயக்கம்

பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டை அருகே புதிய மின்மாற் றியை சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் இயக்கி வைத்தார்.
 
                      பரங்கிப்பேட்டை அடுத்த மணிக்கொல்லை கிராமத்தில் மத்திய அரசின் ராஜிவ் காந்தி கிராம வித்யூத் யோஜனா திட்டத்தின் கீழ் மின் வாரியம் சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடிசைவாசிகளுக்கு மின்சாரம் வழங்கிட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. பு.முட்லூர் துணை மின் நிலைய இளமின் பொறியாளர் வெங்கடேசன் தலைமையில்  சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் செல்வசேகர் புதிய மின் மாற்றியை இயக்கி வைத் தார். விழாவில் ஊராட்சி தலைவர் பழனியம்மாள், நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior