உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

பண்ருட்டி : 

               அங்குச்செட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில்  எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
                பண்ருட்டி அடுத்த  அங்குச்செட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை  முதல்வர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் கதிரவன் முன் னிலை வகித்தார்.  அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி-வினா போட்டிகள் நடந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்பு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ள நம்பிக்கை மையத்திற்க்கு மாணவர்களை அழைத்து சென்று எய்ட்ஸ் குறித்தும் அதை தடுக்கும் வழி முறைகளை பற்றியும் விளக்கம் அளிக்கப்பட் டது. செஞ்சுருள் சங்க அலுவலர்  ரமேஷ், விரிவுரையாளர்கள் புனிதா, அமலோற்பவம் மற்றும் துறை தலைவர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior