உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

சிறுபாக்கம் : 

                வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில்  அரசின் சிறப்பு வருமுன் காப் போம் மருத்துவ முகாம் நடந்தது.
 
                 ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய வேளாண்மை குழு (ஆத்மா) தலைவர் பாவாடைகோவிந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் சக்திவினாயகம் முன்னிலை வகித்தனர். வட் டார சுகாதார மேற்பார்வையாளர் தம்பா வரவேற்றார். நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசித்ரா மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நல்லூர் வட்டார தலைமை மருத்துவர் பரமேஸ்வரி தலைமையில் டாக்டர்கள் பொது மற்றும் காசநோய், இருதயம், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், இ.சி.ஜி., ரத்தம், எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை வழங்கினர்.  ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior