உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

போலீஸ்-பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி : 

           திட்டக்குடி நகர அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான போலீசார் கலந் தாய்வு கூட்டம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
 
             காங்., மாவட்ட பொதுச்செயலாளர் இளவழகன், தி.மு.க., செந்தில்குமார், மதியழகன், அ.தி. மு.க., நகர செயலாளர் நீதிமன்னன், தொகுதி செயலாளர் மதியழகன், பா.ம. க., நகர செயலாளர் காசி, காங்., நகர தலைவர் கனகசபை முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வரவேற்றார். கூட் டத்திற்கு தலைமை தாங்கி டி.எஸ்.பி., இளங்கோ பேசியதாவது: திட்டக்குடி நகரத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் அதிகளவு விளம்பர டிஜிட் டல் போர்டுகள் வைக்கப் பட்டுள்ளது. போலீசாரிடம் அனுமதி பெற்று இரண்டு நாட்களுக்கு முன் வைத்து, நிகழ்ச்சி முடிவடைந்த இரண்டு நாளில் தாங்களாகவே அகற்றிட வேண்டும். அதிக நாட்கள் அகற்றப்படாத போர்டுகள் முன் அறிவிப்பின்றி போலீசாரால் அகற்றப்படும். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 200 விபத்துகள் நடப்பதால், டூ-வீலர் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். போலீசாரின் எச்சரிக்கை பொதுமக்கள் பயன்பெறுவதற்காகத்தான். நகை பாலீஷ் செய்வதுபோல நடித்து வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை திருடும் நோக்கத்தோடு திருடர்கள் நுழைய வாய்ப்புள்ளது. வெயில் காலம் துவங்கி விட்டதால் கதவினை திறந்து வைத்து உறங்க வேண்டாம் என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior