உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

மாசிமகத் திருவிழாவில் படகு சவாரி ரத்து

கடலூர் : 

                தேவனாம்பட்டினம் மாசி மகத் திருவிழாவில் பாதுகாப்பையொட்டி படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
 
               ஆண்டுதோறும் தேவனாம்பட்டினம் மாசிமகத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு "திதி' கொடுப்பது வழக்கம். அதனால் கடலில் புனித நீராடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அவ்வாறு நீராடுபவர்கள் அலையின் சீற்றத்தால் இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகிவிடுகின்றனர். அத்துடன் தொலைதூரத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் படகு சவாரி செய்து மகிழ்வது வழக்கம். இதனால் சில நேரங்களில் படகு கவிழ்ந்து  உயிர் சேதம் ஏற்பட்டது. அதையொட்டி கடற்கரையில் படகு சவாரி செய்வதற்கு போலீஸ் முற்றிலுமாக தடை விதித்தது. அத்துடன் 12 பேர் அடங்கிய மீட்பு குழுவினர் அமைத்து புனித நீராடுபவர்கள் கரையோரமாக குளிக்கும்படியாக அறிவுறுத்தப்பட்டனர். மேலும் மீனவர்கள் உதவியோடு மாசிமகத்திருவிழா பகுதியிலிருந்து சில்வர் பீச் முகத்துவாரம் வரை படகில் ரோந்து பணி மேற்கொண்டனர். இவர்கள் ஏதேனும் கடலில் குளிப்பவர்கள் அபாயக்குரல் எழுப்பினால் அவர்களை காப்பாற்றுவதற்காக  "லைஃப் ஜாக்கெட்' அணிந்து கண்காணித்து வந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior