உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

மோசட்டை ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்

திட்டக்குடி : 

                பெண்ணாடம் அடுத்த மோசட்டை ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.
 
               ஊராட்சி தலைவர் தனம் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பாலு, ஊராட்சி துணைத்தலைவர் வேலாயுதம், நல்லூர் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ராஜசேகரன், அனந்தராஜன், வருவாய் ஆய்வாளர் விருத்தகிரி, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி வரவேற்றார். திட்டக்குடி தாசில்தார் கண்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் வேளாண் உதவி அலுவலர் தங்கதுரை, நிலஅளவைத்துறை சார் ஆய்வாளர் விநாயகம், நில அளவர் பழமலை, ஜெயக்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முகாமில் ஊனமுற்ற, மனநலம் பாதித்த மற்றும் முதியோர் உதவித்தொகை கோரி 22 மனுக்கள் பெறப்பட்டன. சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior