உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

பெண் எஸ்.ஐ., மீது போலீசில் புகார்


பரங்கிப்பேட்டை : 

               மகனை வெளியேற்றி வீட்டை பூட்டியதாக பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் போலீசில் புகார் செய்துள்ளார்.
 
           கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் செல்வராஜ். பரங்கிப்பேட்டை போலீஸ் குடியிருப்பு வீட்டை காலி செய்யவில்லை. இந்நிலையில் அதே குடியிருப்பில் தங்கியுள்ள புதுச்சத்திரம் பெண் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, நேற்று காலை செல்வராஜ் வீட்டிற்கு சென்று அவரது மகன் காமராஜை மிரட்டி வெளியே அனுப்பிவிட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி விசாரித்து வந்தார். இந்நிலையில் பெண் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, செல்வராஜ் மகன்  காமராஜ் தன்னை மிரட்டியதாக புகார் கொடுத் துள்ளார். இந்த சம்பவம் பரங்கிப்பேட்டை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior