உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


நெய்வேலி : 

                  மந்தாரக்குப்பம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
 
                     நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை, மக்கள் மையம் நடத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் மந்தாரக்குப்பத்தில் நடந்தது. என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை பவர் சிட்டி அரிமா சங்க தலைவர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் ஆனந்தன், தியாகராஜன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்வேலி டி.எஸ். பி., மணி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். நுகர் வோர் சம்மேளன பொது செயலாளர் நிஜாமுதீன், மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பு தலைவர் செந்தமிழ்செல் வன், நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் தங்கம், வர்த்தக சங்க பொது செயலாளர் பன் னீர்செல்வம், கெங்கைகொண்டான் நூலகர் வேல்முருகன் வாழ்த்தி பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior