உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

மிக விரைவில் மின் தேவை பூர்த்தி

நெய்வேலி : 

                     'தமிழகத்தின் மின் தேவை, மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும்' என, என்.எல்.சி., சேர்மன் அன்சாரி தெரிவித்தார். என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியவர்களுக்கு, கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. முதன்மை விருந்தினர் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கி பேசியதாவது: இந்தியாவின் எந்த சுரங்க நிறுவனமும் வழங்குவதை விட, என்.எல்.சி., மட்டுமே அதிக இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறது. வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கும் வகையில், இதுவரை மூன்று சென்ட் என்ற அளவில் இருந்த மனைப் பிரிவு, இனி ஐந்து சென்ட் பரப்பளவாக உயர்த்தப்படும். தமிழகத்தின் மின் தேவை மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அன்சாரி பேசினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior