உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

கார்டோசாட் 2பி செயற்கைக்கோள் மே 9-ல் விண்ணில் ஏவப்படுகிறது


                அடிப்படை கட்டமைப்பு, நகரத் திட்டப் பணிகளுக்கு உதவும் கார்டோசாட் 2பி செயற்கைக்கோளை மே 9-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்ணில் ஏவுகிறது. 
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய செய்தித் தொடர்பாளர் எஸ். சதீஷ் கூறியது: 
 
                      700 கிலோ எடை கொண்ட கார்டோசாட் 2பி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி-சி15 ராக்கெட் மூலம் மே 9-ம் தேதி காலை 9.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளின் ஆயுள் 5 ஆண்டுகள் ஆகும்.கார்டோசாட் 2பி செயற்கைக்கோளுடன் 117 கிலோ எடைகொண்ட மேலும் 4 சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் ஒன்று பெங்களூர்-ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மிகச் சிறியசெயற்கைக்கோளாகும். மற்ற 3 செயற்கைக்கோள்கள் கனடா, ஸ்விட்சர்லாந்து நாடுகளை சேர்ந்தவையாகும் என்றார் அவர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior