உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வு


சிறுபாக்கம்: 

                   மங்களூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஊராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். திட்ட ஆணையர் ராஜாராம் முன்னிலை வகித்தார். மேலாளர் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடைபெறும் புதிய குளம் வெட்டுதல், சாலை அமைத்தல், நீர்வரத்து வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கவும்.

                           பணிகள் நடைபெறாத ஊராட்சிகளில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கவும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்டவைகள் குறித்து கலந் தாய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் பொறியாளர் மணிவேல், துணை ஆணையர்கள் சுந்தரம், காமராஜ், கிருஷ்ணமூர்த்தி உட்பட ஊராட்சி உதவியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior