உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

கடலூர் மாவட்டத்தில் 'பந்த்' முழு வெற்றி; வணிகர்களுக்கு நன்றி: எம்.சி.சம்பத்


கடலூர்: 

                    கடலூர் மாவட்டத்தில் 'பந்த்' முழு வெற்றியடைந்துள்ளது. வணிகர்கள் தங்கள் உணர்வுகளை பிரதிபலித்துள்ளனர் என எம்.சி.சம்பத் கூறினார்.

இது குறித்து அ.தி. மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் நேற்று  கூறியதாவது: 

                        அத்தியாவசிய பொருட் களின் விலை உயர்ந்து விட்டன. நடுத்தர, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. 6.5 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் 4 கோடி மக்கள் குடும்பம் நடத்த அவதிப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் மின் தடையால் ஏராளமான தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் அரசு தொலைநோக்குப் பார்வையோடு ஆட்சி நடத்தவில்லை. விலைவாசி உயர்வு, மின்தடை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க.,  மற்றும் தோழமை கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. கடலூரில் கடைகள் முழு அளவில் அடைக்கப்பட்டிருந்தன. வெள்ளையன் அறிக்கை விட்டிருந்த போதிலும், வர்த்தக சங்கம் முழுமையாக கட்டுப்பட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கடைகளை அடைத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.  அவர்களுக்கு எனது நன்றி. இது அ.தி.மு.க., வுக்கு கிடைத்த வெற்றியாகும்.

                     அமைச்சர் பொன்முடி  கல்லூரியில் வேலை பார்க்கும் போது 450 ரூபாய் சம்பளம் பெற்றதாகவும், ஆனால் தற்போது உதவி பேராசிரியர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்றால் அதற்கேற்ற விலைவாசி உயர்வு இருக்குமல்லவா என நியாயப்படுத்தி பேசியுள்ளார். அரசு துறைகளில் அதிகபட்சமாக 20 லட்சம் பேர் பணியாற்றலாம். அவர்களுக்கு மட்டுமா இந்த விலைவாசி உயர்வு. பாதிக்கப்படுவது நடுத்தர, ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த 4 கோடி மக்கள் அல்லவா? மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எம்.சி. சம்பத் கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior