உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய குற்றங்கள் குறைந்துள்ளன: கலெக்டர்


கடலூர்: 

                            கடலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவினரால் கடந்த ஒரு ஆண்டில் 2,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவது போதுமானதாக இல்லை. இவர்களை வெளியில் உலவ அனுமதிப்பது சமூகத்திற்கு தீங்கு என்பதால் இம்மாதிரியானவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடந்த ஆண்டில் மட்டும் 20 பேரை குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழும், 27 பேர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

                    இம்மாதிரி தண்டனை வழங்குவது மட்டும் அரசின் நோக்கமல்ல. இவர்களில் மனம் திருந்தியோர் வாழ உடனடியாக அவர்களுக்காக நிதி ஆதாரம் தேடுவது கடினம். அதற் காக மனம் திருந்திய 55 குற்றவாளிகளுக்கு கறவைமாடு, மளிகைக் கடை, வண்டிமாடு, பெட் டிக்கடை உள்ளிட்ட சிறு வணிகங்களுக்காக 8.24 லட்சம் ரூபாய் அரசு கடன் வழங்கியுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய குற்றங்கள் குறைந்துள்ளன என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior