உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு அ.தி.மு.க., நிவாரணம்


திட்டக்குடி: 

                    திட்டக்குடி அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் நிவாரணம் வழங்கினார். திட்டக்குடி அடுத்த சாத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார், நீலாவதி, வேலு உட்பட ஐந்து பேரின் கூரை வீடுகள் கடந்த 10ம் தேதி மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இதில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கும் நல் லூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

                   இதில் அரிசி, சமையல் பாத்திரங்கள், காய்கறிகள், துணிகள், தலா 500 பணம் ஆகியன வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் மதியழகன், முருகேசன், நல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் சரவணன், திட்டக்குடி முருகன், ஊராட்சி தலைவர் குணசேகரன், பாசறை செயலாளர் இளையராஜா, பாஸ்கர், வரதன் உட்பட பலர் உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior