உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

பாலம் கட்ட தோண்டப்பட்ட மண்ணை மழைநீர் ஓடையில் கொட்டிய அவலம்


நடுவீரப்பட்டு: 

                  நடுவீரப்பட்டு - சி.என்.,பாளையம் இடையே பாலம் கட்ட தோண்டப்பட்ட  மண்ணை ஓடையின் நடுவே கொட்டியதால் தண்ணீர் ஓட வழியின்றி உள்ளது.

                    பண்ருட்டி அடுத்த  நடுவீரப்பட்டு - சி.என்.,பாளையம் இடையே நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக தோண்டப்பட்ட மண் முழுவதையும் பணியின் போது ஓடையில் மழை நீர் வந்து வேலை செய்ய இடையூறு ஏற்படுத்தாதவாறு அப்பகுதியில் உள்ள தெற்கு தெருவிற்கு செல் லும் வழியில் உள்ள சிறிய உயர் மட்ட பாலத்தின் அருகில் கொட்டினர். தற்போது பணி முடிவடைந்து பாலம் திறப்பு விழா நடத்துவதற்கு தயாராக உள்ளது. ஆனால் ஓடையில் கொட்டப்பட்ட மண் முழுவதும் அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர்.

                    இதனால் மழைக் காலங்களில் ஓடையில் ஓடும் தண்ணீர் வழியின்றி தேங்கும் நிலையும், தண்ணீர் அதிகரிக்கும் நிலையில் கரையையொட்டியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் உட்புகும். அதுமட்டுமின்றி புதிய உயர்மட்ட பாலத்தின் ஏழு கால்வாய்களில் ஐந்து கால்வாய்கள் மூடியுள்ளதால் இரண்டு கால்வாய் வழியாகத்தான் நீர் ஓடக் கூடிய நிலை உள்ளது. இதனால் பாலம் குறுகிய  காலத்தில் பாழடையும் நிலை உள்ளது. சி.என்.பாளையம் தெற்கு பகுதியில் தடுப்பு சுவர் கட்டாமல் அப்படியே விட்டு விட்டனர். நடுவீரப்பட்டு பகுதியில் தடுப்பு சுவர் சிறிய அளவிற்கு மட்டுமே கட்டியுள்ளனர். இதனால் மழை காலத்தில் மண் அரிப்பு ஏற்படும். எனவே, கிராம சாலைகள் மற்றும் நபார்டு அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டு ஓடையில் உள்ள மண் முழுவதையும் அகற்றவும், தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior