உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு: பஸ்கள் ஓடியது


கடலூர்: 

                  விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகள் அறிவித்த 'பந்த்'தையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

                    தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூ., கட்சிகள் 'பந்த்' அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று கடலூர் மாவட்டத்தில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பழக்கடைகள், பஸ்நிலைய கடைகள் திறந்திருந்தன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள்  செயல்பட்டன. அரசு பஸ்கள், ரயில்கள் ஓடின. ஒரு சில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. தொலைதூர பஸ்கள் நீண்ட இடை வெளிக் குப்பிறகு இயக்கப்பட்டன.  எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறியல்: 

                          கடலூர் மாவட்டத்தில் 12 இடங்களில் மறியலில் ஈடுபட்ட கம்யூ., கட்சியை சேர்ந்த 39 பெண்கள் உட்பட 393 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம்: 

                     திறந்திருந்த கடைகளை அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூ., கட்சியினர் ஊர்வலமாக சென்று மூடும்படி கூறினர். பின்னர் தி.மு.க., வினர் கூட்டமாக சென்று மூடிய கடைகளை திறக்கும்படி கூறினர். இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. மா.கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர் மூசா தலைமையில் நகர செயலாளர் நடராஜன், மாவட்டக்குழு ராமச்சந்திரன், ம.தி.மு.க., நகர செயலாளர் சீனிவாசன், தமிழ் தேசிய காங், லோகநாதன், லோக்ஜன சக்தி பன்னீர் உள்ளிட்டவர்கள் மேல வீதி கஞ்சித்தொட்டி அருகே மறியலில் ஈடுபட் டனர்.

விருத்தாசலம்: 

                           ஜங்ஷன் ரோடு, கடைவீதி, பாலக் கரை உள்ளிட்ட இடங்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. மதியம் 2 மணிக்கு கம்யூ., கட்சியின் வட்ட செயலாளர்கள் கந்தசாமி, கலியபெருமாள் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

சேத்தியாத்தோப்பு: 

                        பூ கடைகள், சில பழக் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது.

நெல்லிக்குப்பம்:  

                        அ.தி.மு.க., நகர செயலா ளர் சவுந்தர், சேகர், கவுன்சிலர் தனசேகரன், ம.தி. மு.க., நகர செயலாளர் ராமலிங்கம், கஜேந்திரன், மா.கம்யூ., நகர செயலாளர் சுப்ரமணியன், உதயகுமார் தலைமையில் மறியல் செய்தனர். இதனால் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

பண்ருட்டி:  

                        பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. புதுப்பேட் டையில் தனியார் பஸ்சை அ.தி.மு.க., வினர் வழிமறித்ததால்  பரபரப்பு ஏற் பட்டது. இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் சேகர், மா.கம்யூ., பேரூர் கழக செயலாளர் ரங்கநாதன், விவசாய சங்க தலைவர் தமிழரசன்  தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி: 

                        பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூ., வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

பரங்கிப்பேட்டை: 

                  மருந்துக்கடை, பால் கடை மற்றும் 'டாஸ்மாக்' உள்ளிட்ட கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடியிருந்தன.

ஸ்ரீமுஷ்ணம்: 

               பூவராகசுவாமி கோவில் திருவிழா நடப்பதால் கடைகளை மூடச்சொல்லி யாரும் வற் புறுத்தவில்லை. இதனால் ஸ்ரீமுஷ்ணத்தில் அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior