உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

பரங்கிப்பேட்டையில் 168 வீடுகள் திறப்பு : இரண்டு அமைச்சர்கள் பங்கேற்பு


பரங்கிப்பேட்டை : 

             குடிசை மாற்று வாரியம் சார்பில் 168 குடியிருப்புகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பரங்கிப்பேட்டை சின்னூரில் நடந்தது.

             கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். சேர்மன்கள் முத்துபெருமாள், செந்தில்குமார் முன் னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் வரவேற்றார். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ராஜிவ் காந்தி மறுவாழ்வு திட்டத் தின் கீழ் 6 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட் டப்பட்ட 168 வீடுகளை குடிசைமாற்று வாரியம் மற்றும் இடவசதி கட்டுப் பாட்டு துறை அமைச்சர் தங்கவேலன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

           பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார். விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், பரங்கிப் பேட்டை துணை சேர்மன் செழியன், குமராட்சி சேர் மன் மாமல்லன், ஊராட்சி தலைவர் பழனி, மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் பாண்டியன், இளைஞரணி அமைப் பாளர் முனைவர் உசேன், கவுன்சிலர்கள் ஜெகநாதன், காஜாகமால், செயல் அலுவலர் ஜீஜாபாய், எம்.கே.எம்.எஸ்., கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் பஷீருல்லா, முஸ்தாக், புகழேந்தி, அருள்வாசகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior