உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணி எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை பார்வை


திட்டக்குடி : 

            திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணியினை எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை நேரில் பார்வையிட்டார்.

            திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவைச் சேர்ந்த 24 ஆயிரத்து 59 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைந்தன. இதில் வலுவிழந்த கரைப்பகுதியான 1,700 முதல் 2,500 மீட்டர் வரையிலான 800 மீட்டர் கரைப்பகுதியை சீரமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

           கடந்த ஆண்டு முதல் பணிகள் துவங்கி 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இப்பகுதியை மங்களூர் தொகுதி எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து பணிகளின் விபரம், தன்மை, நீர்ப்பிடிப்பு அளவீடு, பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

              மேலும் கரை சீரமைப்பு பணி சம்பந்தமான நீர்ப்பாசன சங்க தலைவர்களின் கோரிக்கைகளை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அப்போது பி.எஸ்.பி., மாவட்ட தலைவர் கதிர்வாணன், உதவி செயற்பொறியாளர் நாகராஜன், உதவி பொறியாளர்கள் பாலமுருகன், தாமோதரன், பாசன சங்க தலைவர்கள் வேணுகோபால், வடிவேல், மருதாச்சலம், பொன்னுசாமி, துரைராஜ், இனாயத், ஊமைத்துரை உட்பட விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior