உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

குடும்ப நல நிதி: கலெக்டர் வழங்கினார்


கடலூர் : 

             கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 41 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார்.

           கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பட்டா மாறுதல், குடிநீர் வசதி, மயான பாதை, மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் 286 மனுக்கள் பெறப்பட்டது. குறைகேட்பு கூட்டத்தில் சமூக நலத்துறை மூலம் 41 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் மூலம் 10 பேருக்கு இலவச தையல் இயந்திரம், டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணிபுரிந்து இறந்த முருகன், மனைவி மகாலட்சுமிக்கு குடும்ப நலநிதியாக 1.45 லட்சம் ரூபாய் காசோலை உள்ளிட்டவைகளை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன் உடனிருந்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior