உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

பெண்களிடம் நகை திருட்டு மூவர் கைது; நகைகள் பறிமுதல்


திட்டக்குடி : 

              தூங்கிய பெண்களிடம் நகை திருடிய மூவரை போலீசார் கைது செய்து 130 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

            கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் தர்மகுடிகாடு, தொளார், வேப்பூர் அடுத்த ஐவதுகுடி பகுதிகளில் வீட்டில் தூங்கிய பெண்களிடம் நகைகளை பறிக்கும் சம்பவம் தொடர்ந்தது. இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் தனிப்படை மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வெலிங்டன் ஏரியின் கடைகால் ஷட்டர் அருகே நின்றிருந்த மூவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

               இதில் மங்களூர் பாஞ்சாலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மஞ்சநாதன் என்கிற ராஜூ (32), கேரள மாநிலம் மணப்புரம் நாகராஜ் மகன் ராஜா (28), வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் சின்னையன் மகன் ராஜதுரை (28) என்பதும், திட்டக்குடி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த 130 கிராம் எடையிலான செயின், தாலிச்சரடு, மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior