உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது


குறிஞ்சிப்பாடி : 

             வடலூரில் இருசக்கர வாகனங்கள் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

                வடலூர் - கும்பகோணம் சாலையில் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் வடலூர் அடுத்த மருவாய் காலனி இளையபெருமாள் (40), கருவேப்பிலங்குறிச்சி சக்திவேல் (32) என்பதும், அவர்கள் வந்த மொபட் திருட்டு வாகனம் எனவும் தெரியவந்தது. மேலும் இருவரும் வடலூர் பகுதியில் பல இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி இருப்பது தெரியவந்தது. இது குறித்து வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து இளையபெருமாள், சக்திவேல் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு மொபட் மற்றும் ஐந்து சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior