உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்குள் தகராறு


கடலூர் : 

               கடலூர் மத்திய சிறையில் இரண்டு கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

              விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் வீரன் (எ) வெங்கடேசன் (40). இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அதே போல் சின்னசேலத்தைச் சேர்ந்த சரவணன் (29) வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இருவரும் விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறையில் ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை 6 மணிக்கு சரவணன் தூங்கிகொண்டிருந்தபோது, வீரன் கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தூக்கம் கெடுவதாக சரவணன் கூறியதால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த வீரன், சரவணனை திட்டி, தாக்கினார். இது குறித்து சிறை அலுவலர் வேணுகோபால் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வீரன் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior